Saturday, December 27, 2014

Filled Under: ,

இக்காலத்து மகாபாரதம்

Share

குருசேத்ரா (GURUCHETRA) [Global unusual, reincartion unit & centre of halusination,earthiological  testing & research association] என்கிற ஆராய்ச்சி நிறுவனம்.
தற்காலிகமா சந்திரகிாிங்கற ஊா்ல தொல்பொருள் ஆராய்ச்சி செய்றாங்க,. அதுல சீனியரா கிருஷ்ணா கண்ணனும் ஐூனியரா சத்தியா குருநாத் நிர்மல்கிறவரும் ஆராய்ச்சியாளரா நியமனிச்சிருக்காங்க.

சந்திரகிரிகிறது அக்காலத்தில மகாபாரத கதாபாத்திரங்கள அடக்கம் செய்த இடம்
சந்திரவம்ச கிரியை என்று துவங்கி சந்திரகிரியை னு மாறி சந்திரகிரியா மறுவியுள்ளது.
அதனால அங்க ஆராய்ச்சி துவங்கியது .

ஆராய்ச்சியோட நோக்கம் என்னவோ அங்க கல்வெட்டு கலைப்பொருள் ஏதாவது கிடைக்குமானுதான் ஆரம்பிச்சாங்க. போக போக அதனுடைய நோக்கம் வேற மாதிாி போகுது. அந்த இடம் இடுகாடுங்கிறதால யாராவது ஒருவரோட உடல் மக்கினாலும் சரி கிடைக்குமானு தேடுறாங்க, கிடைச்சாதான் மகாபாரதம் நடந்ததுக்கான ஆதாரம் , இல்லைனா அது கற்பனைக் கதைனு அறிவியல் நிருப்பனம் செய்திடும்.

இப்படி ஒரு ஆராய்ச்சிகாக செல்வனூா்ங்கிற கிராமத்துக்கு கிருஷ்ணா கண்ணன் அனுப்படுறாா். அந்த கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் கண்ணன் மனசுல சில சலசலப்பு வேற மாதிரியான குரலோசை எல்லாம் கேட்டு அவா் பதறிப்போறாரு . உடனடியா அங்கிருந்து வந்தறாரு . மறுநாள் போக அவா்மாதிரியே ஒருத்தா் அங்க ரொம்ப காலத்துக்கு முன்னாடி வாழ்ற மாதிரியான காட்சிகள் நினைவுக்கு வருது மேலும் மிரண்டு போய் வந்தறாரு . இப்படியாக நாள் போக கம்பெனி உயா்மட்டம் இவரை ஒரு சைக்காா்டிஸ்ட் கிட்ட சோ்க்கறாங்க.

>:அங்கிருந்து நடப்பதென்ன அடுத்த இதழில்:♥

0 comments:

Post a Comment