Friday, December 19, 2014

Filled Under: ,

மாற்றம் தேவை உரை1

Share

உலகத்தை படைத்த கடவுளுக்கு பல லட்சங்களையும்
கோடிகளையும்
செலவழித்து கட்டுகிறோம் வீடு கோவில்களாக,
ஆனால் தெருவில் வாழும்
மக்களுக்கு உதவ யாருமில்லை. எல்லாம்
உள்ள இறைவனுக்கு ஏன்
நண்பர்களே காணிக்கை அதுக்கு பதிலாக
இல்லாதவங்களுக்கு உதவலாமே.
கோவில்களுக்கு கொடுக்காம
இருந்தா நல்லது நடக்காதா என்ன,
அப்படி கெட்டது நடந்தா அந்த
சுயநலமான கடவுள்
நமக்கு எதற்கு நண்பர்களே. ஆனால் நாம
இல்லாதவங்களுக்கு உதவினால் கடவுளோட
ஆசிர்வாதம் நமக்கு நிச்சயம் உண்டு.
யாரோ மூடநம்பிக்கையை கடைப்பிடிச்சதால நாமும்
அதையே கடைப்பிடிக்கிறோம். ஆனால் எந்த
கடவுளுக்கும்
காசோ வீடோ தேவையில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்
நண்பர்ளே. கடவுள் எல்லோருக்கும் முக்கியம்
தான் ஆனால் அவர் இருக்க
வேண்டியது கோவில்களில் அல்ல நம்ம
உள்ளத்துள,
அதுக்கு அவருக்கு காணிக்கை தேவையில்லை நல்ல
மனசுடைய
இல்லாதவங்களுக்கு உதவுகின்ற மனிதன்
தான்
தேவை நண்பர்களே எனவே தெருவில் வாழும்
மக்களுக்கு உதவுங்கள். ஒன்றுக்கும் உதவாத
உண்டியலில் காசை நிரைப்பதை விட
ஒரு வேலைக்கூட உணவில்லாமல் பசியில்
வாடும் குழந்தைகளின்
வயிறு நிறையட்டுமே அப்போழுது பார்பிர்கள் கோவிலில்
சிலையாக இருந்த கடவுளை அந்த குழந்தையின்
முகத்தில் நண்பர்களே!

0 comments:

Post a Comment