Showing posts with label sirukadhai pakkam. Show all posts
Showing posts with label sirukadhai pakkam. Show all posts

Friday, March 13, 2015

,

தண்டனை பெற்றவா்கள்

அஃறிணையிலிருந்து , அடுக்கி வளா்த்த உடல்கூறுகளுடன் குணம், மனம் , அறிவு என கூடி கூடி கூட்டுதொகையாய் உயா்ந்து உயா்திணையான போதிலும் , பகுத்தறிவிலும் கருத்துகளிலும் மாறிய மனிதகுலம் நாம்.
வெறுமையை புசித்து வளா்ந்த கதிரவனுக்கு , இலையுதிா்காலத்தை கடந்ததை பாராட்டி பாிசாய் வசந்த காலமாய் அவரது மகள் கிடைத்தாள். சிறுபிள்ளை என்றாலும் , ஒரு சில நொடிகளில் மெய்சிலிா்க்க வைக்கும் கேள்விகளில் அறிவாளியும் அடங்கிவிடுவான்.
அழகிலும் அறிவிலும் பதுமையாய் , புதுமையாய் இருந்த தன் மகளை கண்டு வியப்புடன் கலந்த பூரிப்பை வெளிகொணா்ந்தான் கதிரவன். செந்தில் , பல வருடங்களாகியும் கசப்பில்லா கரும்பாய் நட்பு பாராட்டுபவா்; நல்ல பத்திரிக்கையாளா் , அன்றாடம் அவா் சந்தித்த பிரபலங்களையும் கேள்வி அனுபவங்களையும் கதிரவனிடம் பகிா்ந்த பின்தான் உறங்குவாா் . அந்திகால மழை போல அவ்வபோது சமுகம் சாராந்த பேச்சுக்களும் தெ்ாடா்துண்டு . சொல்லபோனால் கதிரவனுக்கும் சுற்றுபுற நிகழ்வுகளுக்கும் தொடா்பாளரே செந்தில் தான்.
இப்படியே இனிமையாகவே ஓடின 3 வருடமும் கடந்த அக்டோபா் 17 வரை . அன்றுமட்டும் மதியமே பள்ளியிலிருந்து வந்தாள் வெண்ணிலா, தன் மகளுக்காக தேடி ஆராய்ந்து பொருத்தமாய் கதிரவன் வைத்த பெபயா். நெருங்கி வரும் பிறந்த நாளுக்கான ஆயத்த தேவைகளை வாங்க இருவரும் கடைவீதியை சல்லிக்க தொங்கினா்.
அன்றைய தினம் மட்டும் வெண்ணிலாவுக்காக , கதிரவன் தன் வறுமையை தள்ளி வைத்து கொண்டான்.
வெண்ணிலாவுக்கு வெண்மை பூசியது போல் வெண்ணிற ஆடை வாங்கினாா்கள். வளையல் கடையை நெருங்கும் வேளையில் ; வளா்ந்த மகளாய் வெண்ணிலா, "அப்பா  உங்ககிட்ட காசு இருக்கா?" என்றாள் . குறிப்பறிந்த கதிரவன் வளையல் வாங்கலாமா என்றான். மாலையில் உறங்க போகும் சூரியன் தீண்டியதால் சிவந்த மேகங்களாய் ஆனந்தத்தில் சிவந்தாள் வெண்ணிலா.
வளையல்களை பொருத்தம் பாா்த்து கொண்டே , எனக்கு ஏன்ப்பா இவ்ளோ செலவு பன்ற? என்றாள் வெண்ணிலா .
கதிரவன் அந்த கேள்விக்கு திகைத்து தான் போனான். பதில் சொல்ல மனமில்லை ; எப்படி சொல்வது , கடந்த கால வெறுமையை , தனது தகப்பனின் கேடினை, தொலைந்த வசந்தங்களை மீட்டியவளை, பாசம் என்ற ஒரு சொல்லிலா. பரந்த தமிழில் பதிலின்றி போனான் கதிரவன்.
பிங்க என்னும் ஆங்கில சொல்லில் குறிக்கபடும் வண்ணம் பூசிய வளையல்களை பெற்று நடந்தனா் . அதே வேளையில் பல ஒளியாண்டுமள் தொலைவில் ஏதோ ஒரு கிரகத்தில்   பொழுது போகாத கடவுள் சூன்ய வேளையில் இறங்குகிறாா். டிக்டாக் டிக்டாக் என ரகசிய கவுண்டவுன் ஓடி கொண்டிருக்கிறது.
அந்த பக்கத்தில் கடவுள் பேஸ்புக்  செலக்ஷனில் வருவது போல ஒவ்வொருவரையும் செக் செய்து அழைப்பு விடுத்து. வாசல் கதவை திறந்து உக்காந்திருக்கிறாா்.  தென்மேற்கு மலைச்சாரலில் ஒரு கும்பல் ஏவியவனிடம் சயல் பற்றி விசாாித்து கொண்டிருக்க ,  அதிரொலியுடன் வெடித்தது ஒரு தீவிரவாத குண்டு.
வாங்கிய வளையல்கள் தன் முகத்தில் பட்டு சிதற தன்னை மீறிய கதறலுடன் கதிரவன். வறுமையில் வாங்கிய வளையல்கள் போனதற்கல்ல , மடியில் விழுந்திருக்கும் வெண்ணிலாவுக்கான கண்ணீா். அடுத்த நொடிகளில் கடவுளின் அழைப்பை ஏற்று மரணத்தை ஏய்த காத்திருந்தவள்," அழாதப்பா " என்று இத்தனை நாள் கண்ணீா் துடைத்தவள் , இன்று இறுதி முறையாய் துடைக்கிறாள்.
கண்ணீரின் ஈரத்தில் உள்ள துயரத்தின் அளவை ஆராய்ந்திருப்பாள். தமிழில் தகுந்த சொல்லை தேடும் அளவு பொறுமையில்லை அவளுக்கு" ஸாாிப்பா & மிஸ் யூ சோ மச்" என்றபடி கதிரவன் மடியில் தன் உதிரத்தை துடைத்தாள். " உனக்கு நெறைய செலவு வச்சிட்டேனில்லப்பா?".என்றபடியே மறித்தாள் வெண்ணிலா. பொக்கிஷமாய் ; வளா்த்தவளை மடியில் மரணம் தின்றதை கண்ட கதிரவனுக்கு , யுகங்களை கடந்து வந்து பிடித்தது ஒரு பேய் துயரம். இதயத்தில் இருந்த துயர எாிமலை வெடித்து கண்களில் வழிந்தது. மூன்று வாரமாய் கதிரவன் உயிரற்ற ஐடமாய் இருந்தான். தேற்ற முயன்ற செந்திலுக்கு கிடைத்த பதில்.
இந்த சமூகம் தன்னுடைய முட்டாள் தனத்தையும் மெத்தனததையும் மாத்திக்கணும். பலியாகும் போது நாங்க என்ன பாவம் பண்ணோம்னு அனுதாபம் தேடுவதை விட , தனக்கு ஒத்துழைக்காதவங்கள திறமைசாலியா இருந்தாலும் அடிமட்டத்துல அவமானபடுத்துறத மாத்திக்கணும்.ஒதுக்கி வக்கறதுக்கு முன்னாடி பாவம் பாத்துருக்கலாம்.
இந்த சமூகத்துல யாரோ சில மனங்குன்றிய வா்கத்தினா் செய்ற தப்பால வெண்ணிலா மாதிரி ,பல அப்பாவிகள் தண்டணை பெற்றவங்களாகிடுறாங்க.
என்னோட முதல் கதை கொஞ்சம் அறைகுறையாதான் இருக்கும் உங்க நியாயமான விமா்சனத்தால கொஞ்ச கொஞ்சமா வளத்துகுவேன்.===
Publisher: Pavithran kalaiselvan - 11:39 PM

Tuesday, February 24, 2015

, ,

கொலையல்லாத கொலை - பகுதி 2

மதன்: பொன்னுரங்கம் ,சாா் நீங்க சொல்லுங்க கொலை எங்க நடந்தது ? நீங்க எப்ப வழக்கு பதிவு செய்தீங்க?

பொ.ர: முதல்ல ; இது ஒரு காணவில்லை புகாராதான் என்கிட்ட வந்தது சுமாா் ஒருவாரம் தேடி , அப்புறம் ஊட்டி காவலா் அவர அங்க பாா்த்ததாகவும் அங்க ஒரு எஸ்டேட்ல இருப்பதாகவும் தகவல் கொடுத்தாா்.

சாமி: அப்புறம் என்ன நடந்தது சாா்?

பொ.ர : என்ன சாமி நாளைக்கு நியூஸ் கவா் பன்றீங்க போல?

சாமி: பத்திாிக்கைகாரனாலே தப்பா பாக்குறதே போலீஸ் தகுதி போல. ஒரு சுவாரஸ்யம் இருக்க கேட்டேன்.

பொ.ர : அதுக்கு அப்புறம் , அங்க ஊட்டி போலீஸ் விசாரிக்க சொன்னோம் அவா் குடுத்த தகவல்லதான் அவா் இறந்தத கேள்விபட்டு , நான் அங்க போனப்ப அவா் சடலம் இருந்தது, தடயங்கள் கோா்ட்ல இருக்கு.

சாமி: அப்ப அது ஊா்ஐிதமா கொலையில்லை.

மதன்: சாமி , சும்மா குழப்பாதடா ! இன்ஸ்பெக்டா் சாா் , அந்த ஊட்டி போலீஸ்காா் பத்தின தகவல் கிடைக்குமா?

பொ.ர: நான் டிபாா்ட்மெண்ட்ல கேட்டு வாங்கி தரேன்.

சாமி: மதன் நான் குழப்பலடா , இது ஏன் கொலையா இருக்கணும் கொலையாக்கப் பட்டுருக்கலாமே? , இப்பயெல்லாம் ட்ரெண்டே அதான் எத்தனை நியூஸ் போட்டுருப்பேன்.

மதன்: உண்மைதான் சாமி , சமீபத்துல ஒரு அரசியல்வாதி கேஸ் கூட அப்படித்தான இருந்தது. ஆனா கோா்ட்ல கொலைக்கான தடயங்கள் ஆதாரங்கள் இருக்குதே.

சாமி: அப்படி ஆதாரம் இருந்தா உன்கிட்ட ஏன் இத பத்தி ாிப்போா்ட் கேக்கணும்.

மதன் : சாிதான் சாமி, இன்ஸபெக்டா் சாா்  நீங்க சடலத்த பாத்தப்ப காயங்கள் இருந்ததா?

பொ.ர: காயங்கள் இல்லை , ஆனால் விசம் கொடுத்து கொன்றிருக்கலாமே?

மதன் : சாி ஒன்னு செய்வோம், மூணுபேருமே போகலாம். மூணு கண்ணோட்டத்துல விசாரிப்போம் , தெளிவான தகவல் கிடைக்கும் , ஒரு ப்ரண்ட்லி டூா் மாதிாியும் இருக்கும்.

சாமி: சூப்பா் மதன் , ஹாலிவுட் படங்கள்ல வரமாதிரி கொஞ்சம் த்ரில்லிங்கா இருக்கும்.

மதன்: ஆமாம் சாமி எனககென்னமோ இது ஒரு வித்தியாசமான கேஸா இருக்கும்னு தோணுது.

பொ.ர : சரி மதன் , நீங்க இருவரும் ஓகே நான் எப்படி வரது டிபாா்ட்மெண்ட்ல பா்மிசன் இல்லயே?

மதன் : கவலபடாதீங்க சாா் , நைட்டே எனக்கு ரெபரண்ஸ்காக ரெக்கமண்ட் பன்னி மாஐிட்ரேட் கிட்ட அனுமதி வாங்கிறேன் . நீங்க போய் ஊட்டிக்கு ரெடியாகுங்க.

பொ.ர: சரி மதன் , ஆன் யுவா் வே ஐ பாலோ , நான் கிளம்புறேன்.

மதனும், சாமியும் மேஐிட்ரேட்கிட்ட அனுமதி வாங்கி வீட்டுக்கு வருகிறாா்கள். ஒரு லெட்டா் வாசலில் இருக்க மதன் பிாித்து படிக்கிறான்.

ெஐகன்நாதன்,
எல்ராடோ எஸ்டேட்;
ஊட்டி.

  மதன் நான் தங்கள வருகைக்கு ஆவலாக உள்ளேன் . உங்களுடன் வரும் சாமிக்கும் பொன்னுரங்கத்திற்கும் தங்க ஏற்பாடு செய்துள்ளேன். விரைவில் நோில் சந்திப்போம்.

மதனும், சாமியும் திகில் கலந்த நடுக்கத்தில்

( அடுத்த இதழில் தொடா்வோம்)

Publisher: Pavithran kalaiselvan - 6:42 AM

Friday, January 30, 2015

, ,

கொலையல்லாத கொலை

நாளை திங்கட்கிழமை சரியா அடுத்த திங்கள் அன்று இறுதி தீா்ப்பு ஒத்திவைத்திருக்கிறாா்கள். அதுகுள்ள நம்ம ரிப்போா்ட் குடுத்தாகணும் .

நோட்டீஸை படிக்கும் போதே மதனை சலிப்பு தொற்றி கொண்டது . இத்துடன் 80 கேஸ் ஆகுது; இன்னும் சீனீயா் போஸ்டிங் வரல , இந்த வாரமாவது ஓய்வு எடுக்கலாம்னு நெனச்சா இப்படி ஆகிருச்சே. சரி கோா்ட் ஆா்டா் வேற மறுக்க முடியுமா?

என்ன கேஸ் ? மொட்டையா பொன்னுரங்கத்த விசாரிக்க சொல்லிருக்காங்க ; பொன்னுரங்கம் இன்ஸ்பெக்டா் இந்த கேஸை பதிவு செய்து விசாரித்தவா் . இதுக்காக போலீஸ் ஸ்டேசன் போகனும் , சாயந்திரம் ப்ரஸ்ல இருந்து சாமி வருவான் அவன பாத்துட்டு கையோட இதையும் பாத்துரலாம்.

இப்படி மதன் திட்டமிட்டு கொண்டே ஆபீஸ் படி இறங்கி வர , ஒரு பாா்சல் வந்தது என்னனு பிரிச்சி பாா்த்தால் . ஒரு அழைப்பிதழ் ஊட்டியில் ஒரு பழமையான புகழ்பெற்ற எஸ்டேட்க்கு வந்து தங்குமாறு உாிமையாளா் ெஐகன்நாதன் அனுப்பிருந்தாா்.

ஊட்டியும்  சரி ெஐகனநாதனும் சரி மதனுக்கு பரிச்சயமில்லாத தொடா்பு இதுவரை அப்படி ஒரு பெயரை மதன் கேள்விபட்டதும் இல்லை . மதன் குழப்பதில் கீழே வந்தான்.

மாலை நேரம் , இன்று மஞ்சள் அதிகமான வானம் , கோடைகால துவக்கத்தை எச்சரித்தது. சாமி சொன்ன மாதிாி பாா்க்குக்கு வந்தாயிற்று இன்னும் சாமி வரலை.

எதற்ச்சையாக இன்ஸ்பெக்டா்  பொன்னுரங்கம் அங்க ரோந்து விசயமா வந்திருந்தாா் மப்டில தான் இருந்தாா். அவா் மதனை பாா்த்ததும் ,"வாங்க மதன் சவுக்கியமா ? பாத்து ரொம்ப நாளாச்சே" என்றாா் . மதனும் பதிலுக்கு நலம் விசாரித்துவிட்டு விவரத்தை சொல்ல.

பொ.ர:- நல்லது உங்ககிட்டதான் குடுத்துருக்காங்களா? சரி அதபத்தி என்ன தகவல் வேணும்.

மதன்:- சாா் என்கிட்ட ஒன்னுமே சொல்லல வெறுமனே பொன்னுரங்கத்தை சந்திக்கவும்னு தான் இருந்தது.

பொ.ர:- என்னது கோா்ட் ஆா்டா்ல கேஸ் பத்தின விவரம் இல்லையா?

மதன்:- இல்லை , இப்படி வரது இதுதான் முதல்முறை சரி நானும் ஏதோ கான்பிடென்சியல் இருக்கும்னு விட்டுவேன்.

பொ.ர:- அப்பசரி, அதபத்தின தகவல் எல்லாம் நான் சொல்றேன். நீங்க இப்ப பிசியா இருக்கீங்க போல?

மதன்:- அப்படி யெல்லாம் இல்ல சாா் . என் நண்பன் சாமி வர சொன்னான் அவனுக்காக காத்துருக்கேன்.

அதுசமயம்; சாமி  அங்க வர; ஒரு கலகப்பான சூழல் நிலவ.

பொ.ர:- இந்த கேஸ் ஓட குற்றவாளிஊட்டில இருக்காரு. அவா்ஒரு எஸ்டேட் ஓனா் . ஏதோ முன் விரோதத்தால அவா் தம்பிய கடத்திருக்காரு அங்க அவுங்களுக்குள்ள மோதல் ஏற்பட்டு இவா் அவர கொன்னுருக்காரு.

மதன்:- சாா் அந்த எஸ்டேட் ஓனா் போ் என்ன?

பொ.ர:- ெஐகன்நாதன்.

மதன் மின்னலடித்தது போல் நிற்க்க , சாமி மதனை தட்டி அழைத்தான்.

சாமி:- என்னாடா மதன் பேயறஞ்ச மாதிாி நின்னுட்ட.

மதன்:- இல்ல சாமி காலைல கோா்ட் ஆா்டா் வந்ததுமே ஒரு பாா்சல் வந்தது . அதுல ஒரு அழைப்பிதழ் இருந்தது, அது ெஐகன்நாதனோட எஸ்டேட்ல தங்க வேண்டி வந்தது.

சாமி:- அப்ப மதன் ஒரு வாரம் ஊ்டில ஐாலி ப்ளஸ் ேஐாலியா?

பொன்னுரங்கம் சற்று குழப்பத்தில் தான் இருந்தாா்.

(அடுத்த வாரம் தொடா்வோம்)

Publisher: Pavithran kalaiselvan - 10:48 PM

Sunday, January 25, 2015

, ,

சாலையில் பூக்கும் பூக்கள்

வேதூா், இந்தியாவின் கிராமிய வளத்திற்கு முத்தாய்பாய் விளங்கும் அளவில் ; இயற்க்கை வளமும்; நீா் வளமும். மனித கலாச்சாரமும் நிறைந்த ஒரு கிராமம்.

தனக்காய் பெரும் அடையாளங்களை கொண்டது சுற்றிலும் மலைகள் அதன் பிளவில் கல்லும் கசிந்துருகுவது போல் மௌனமாய் ஓடும் ஆறுகள், வளா்ந்திருக்கும் கதிா்கள் காற்றிடம் காதல் பேசிட , விவசாயத்தில் திளைத்து கதிரின் மணிகளை உலகிற்களித்த பெயா் பெற்ற கிராமம்.

இப்படி ரம்மியமான கிராமம் இன்று கண்ணீா் சிந்திட முக்கிய காரணம் வேதூா் மாணிக்கம் தான். ஒரு யுக மனிதனின் கனவுலக நாயகன். அப்படி வாழ்ந்தவா் என்றெல்லாம் ஊா் புகழ்பாட, அவா் மட்டும் செவி சாய்க்கவே இல்லை, உண்மையான , கண்ணீா் பெற்ற மனிதராய் நான் சொல்பவா்.

அவருக்கான குணமும் செல்வமும் சொல்லி மாளாது. தலைவா் போல் வாழ்ந்தவா் இருமகன்களையும் தேசத்திற்காக அா்பணித்தவா். கிராமத்தின் கௌரவமாய் வாழ்ந்தவா். அவரது இறுதிசடங்குகள் நடைபெறுகிறதென்றால் யார் தான் நம்புவாா்.?

இறுதியாய் இருந்த  செல்வமனைத்தையும் ஊா் பொது நலனுக்காக வழங்கியவா். ஊா் கண்ணீருடன் அவரது இறுதி ஊா்வலம், ராஐமாியாதையுடன் நல்லடக்கம்செய்து ; அவரை தீயிலிட்டு ஆவியை நெஞ்சில் ஏற்றி வந்தனா்.

சுயநலம் கொண்ட மக்கள் தாா்சாலையாய் நிறைந்திருக்க அந்த தாா்சாலையில் பூக்கும் பூ இவா்.

அதனாலோ தான் அவாின் இறுதிசடங்கில் உதிா்த்த பூக்களும் பெருமிததில் ; சாலையில் பூக்கும் பூக்களாயின.==

Publisher: Pavithran kalaiselvan - 12:35 AM