Showing posts with label santhoshkumaran. Show all posts
Showing posts with label santhoshkumaran. Show all posts

Friday, December 19, 2014

,

நம் பூமி! நம் அன்னை!

#பூமி
பூமி உருவாகி 480 கோடி வருடங்களாயிற்று. சூர்ய
குடும்பத்தின் 4வது மகள் தான் பூமி.
வெறும் பாறையாக இருந்தவள் பல
இயற்கை மாற்றங்ளால் கருவுற்றாள். மரம்
செடி கொடி விலங்குகள் பறவைகள்
நீர் வாழ் உயிரினங்கள் நுன்னுயிர்கள்
மனிதர்கள் என எல்லாரையும்
பெற்றெடுத்தாள் இந்த தாய்.
எல்லாரையும் அன்பாக
பார்த்து கொண்டாள். அவளுடைய
மிகப் பெரிய இதயத்துடிப்பு எரிமலைகள். தன்
பிள்ளைகளுக்கு தன்னை சமமாக பகிர்ந்தாள்.
ஆனால் காட்டுமிராண்டி கூட்டமான 6
அறிவு மனித குழந்தைகள்
பெத்தவளையே கூரு போட்டார்கள்.
பொன் விளையும் நம்
பூமி தாயை விலைக்கு விற்றார்கள்.
எனக்கு தான் சொந்தமென
உரிமை கொண்டாடினார்கள். தன்
பிள்ளைகளின் நலனுக்காக அவள்
எல்லாவற்றையும்
பொறுத்து கொண்டால்.
ஆனா தாயின் கருவிலே மனிதர்கள்
இரக்கமில்லா செயல்களை செய்தார்கள்.
இதை எல்லாம் கண்டு கோபமான தாய்
நிலநடுக்கம் சுனாமி சூறாவளி புயல்
ஏரிமலை சீற்றம் என இயற்களை சீற்றங்களால்
தன் பிள்ளைகளை கொல்கிறாள்.
தாயே பெத்த
பிள்ளையை கொல்கிறாள் என்றாள்
பிள்ளைகள் எவ்வளோ அரக்கர்களாக இருப்பர்.
ஆனா அவ தன்னுடைய நல்ல பிள்ளைகளையும்
இழந்ததால் மழையாக கண்ணீர்
வடிக்கிறாள். எல்லா உயிரினங்களுக்கும்
முதல் அன்னை நம் பூமி தான். நாம் பூமியின்
பிள்ளைகள்
என்று சொல்லும்போதே அனாதை என்கிற
வார்த்தை அழிந்துவிடுகிறதே. வெறும் 5 நிமிட
சுகத்தில் பிறந்த ஈனப்பிறவியான மனிதர்கள்
அனாதை என்கிற
வார்த்தையை பயன்படுத்தி பிரித்து பார்த்தானே.
என் தாய்க்கு நான் மனிதனாக
பிறந்து பாவம் செய்துவிட்டேன். உண்மையில
அவளுடைய செல்ல பிள்ளைகள் தாவரங்கள்
விலகுகள் பறவைகள் மற்றும் நீர் வாழ்
உயிரினங்கள். எனவே தான்
அவைகளுக்கு இயற்கையாகவே சில ஆபூர்வ
சக்தியை தந்திருக்கிறாள் 5 அறிவோடு.
விலங்குகளையும் மனிதர்களையும்
ஒப்பிட்டு பார்க்கையில் 5 அறிவும் ஒன்று தான்.
அந்த 5 அறிவும் நல்லது செய்பவை. மனிதன்
தன் 6 அறிவை பயன்படுத்தி கெட்ட
செயல்களை தான் அதிகம்
செய்கிறான். தன் அன்னையை கவனிக்க
மறந்துவிட்டான். இயற்கை சீற்றங்கள்
என்பது பூமிக்கு உடல்நலம்
சரியில்லை என்பதாகும். பூமியின் மூத்த
பிள்ளைகளான
மரங்களை வெட்டி கொன்றுவிட்டானே இந்த
மனிதன். பிறகு இயற்கை எப்படி சீராக இருக்கும்.
மழை எப்படி வரும். மோசமான சீதோஷன
நிலை தான் ஏற்படும். சாதி மதம்
மொழி இனம் என மனிதர்கள்
அடித்து கொள்கிறார்கள். என் தாய்
பாவிகளை பெற்றெடுத்துவிட்டோம் என
அழுகிறாள். அவள் கண்ணீரைத் துடைக்க
போவது யார். பஞ்சு மெத்தையில் படுப்பதைவிட
உங்கள் நிலத்தில் படுத்து ஒரு முறையாவது நம்
அன்னை பூமியின் தாலாட்டை கேளுங்கள்.
இன்னொரு பிறவி எனக்கு இருந்தால்
யாருக்கும் தீங்க செய்யாத
அவளுடை மூத்த பிள்ளையான மரமாக அவள்
கருவில் பிறக்க விரும்புகிறேன்.
நம் பூமி! நம் அன்னை!

Publisher: Pavithran kalaiselvan - 8:06 PM

Monday, December 15, 2014

,

கடைசி நேர காதல்

கடைசி நேர காதல்
December 13, 2014
ஒரு ஆண் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணை வெறித் தனமாக காதலித்தான். அவளிடம் தன் காதலைச் சொல்ல தயங்கினான். தினமும் அவளின் நினைவிலே வாழ்ந்தான். ஒரு வழியாக தைரியத்தை வரவைத்து கொண்டு அப்பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்தினான். ஆனா அவளோ அவனுடைய உண்மையான காதலை புரிந்து கொள்ளவில்லை. அவனை திட்டிவிட்டாள். இதையே நினைத்து அவன் தினம் தினம் அழுதான். தன்னுடைய இரத்தத்தால் ஒரு கடிதம் எழுதி அதன் மூலம் காதலை இன்னும் அழுத்தமாக வெளிப்படுத்தினான். சாலையில் அப்பெண்ணை சந்தித்து அக்கடிதத்தை ஒப்படைத்தான். மேலும் ஆத்திரமடைந்த அவள் அந்த கடிதத்தை படித்து கூட பார்க்காமல் அதை துண்டு துண்டாக கிழித்து அவன் முகத்தில் விட்டெறிந்தாள். அந்த காகித துண்டுகள் காற்றினால் சாலையில் பறந்து சென்றன. அவனோ அவளுடைய கையை பிடித்து நான் என்னா பண்ணா நீ என்ன லவ் பண்ணுவ என்று கேட்டான். அதற்கு அவள் இப்போ நான் கிழித்தெறிந்த காகித்தை ஒட்டி கொண்டு வா நான் உன்னை லவ் பண்றேன் என கேலியாக சொன்னாள். உடனே அவன் சாலையில் ஓடி தான் எழுதிய கடிதத் துண்டுகளை சேகரித்தான். அதை அவள் பார்த்தாள். அப்போது திடீரென ஒரு வாகனம் சாலையில் வேகமாக வந்து அவனை இடித்து தூக்கி எறிந்தது. அவன் சேகரித்த காகித துண்டுகள் யாவும் காற்றில் பறந்தன. அவன் சாலையில் மடாரென கிழே விழுந்தான். அவன் தலையில் பலத்த அடிப்பட்டு இரத்தம் கசிந்தது. இச்சம்பவந்தை நேரில் கண்ட அவள் ஓடிவந்து அவனை பார்த்தாள். அவனும் இறந்துவிடுகிறான். அவனுடைய வலது உள்ளங்கை மட்டும் மூடி இருந்தது. அதை அவள் திறந்தாள் அப்போது ஒரே ஒரு காகித துண்டு மட்டும் அவன் கையில் இருந்தது அதில் நான் உன்னை காதலிக்கிறேன் என்கிற வரி மட்டுமே இருந்தது. அதை பார்த்ததும் அவள் கண்களில் நீர் வந்தது. அவனுடைய உடலை தன் மடியில் வைத்து கொண்டு ஐ லவ் யூ ஐ லவ் யூ என கதறி அழுதாள்...
;-(



Publisher: Pavithran kalaiselvan - 12:35 AM