தாஜ்மஹால்
ரகசியம்
தாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப்
பட்டது கிடையாது !!
முன்கதை சுருக்கம் இது தாங்க... தாஜ்
மஹால் ஷாஜஹானால் கட்டப்
பட்டது கிடையாது. அது அவர் ஒரு ராஜ்புட்
அரசரிடமிருந்து (ஜெய் சிங்) பிடுங்கியது.
மும்தாஜுக்காக ஷாஜஹான் தாஜ்
மஹாலைக் கட்டியாதக் கூறப்படுவது உலக
மஹா டகால்டி.
இப்ப விஷயத்துக்கு வருவோம். நம்ம பள்ளிக்கூட
காலத்துலேர்ந்து படித்துக்
கொண்டு வருவது என்னவெனில்:
தாஜ்
மகாலை கட்டியது ஷாஜஹான்.
அவரது மனைவி மும்தாஜின் நினைவாய் அவர்
இதைக் கட்டினார். இதை வடிவமைத்தவர் இரான்
நாட்டைச் சேர்ந்த உஸ்தாத் இசா என்பவர்.
தாஜ் மகாலை கட்ட 22 ஆண்டுகள் பிடித்தது.
தாஜ் மஹால் கட்டப் பட்ட காலம் கிபி 1631
- 1653. சுமார் 20000 பேர் இதற்காக
உழைத்தனர்.
இப்ப இதைக் கேளுங்க பேராசிரியர் பி. என். ஓக்
என்ன தன்னோட புத்தகம் "Taj Mahal : The True
Story" தனில் என்ன
சொல்றார்னா... தாஜ்
மஹால்ல் விஷயத்தில் உலகம்
முழுவது ஏமாற்றப் பட்டுள்ளது. தாஜ்
மஹால் மும்தாஜின் சமாதி அல்ல
அது ஒரு புராதான சிவன் கோயில்
என்று குறிப்பிடுகிறார். முன் காலத்தில் தாஜ்
மஹால்
"தேஜோ மஹாலயா" என்ற
பெயரால் அழைக்கப்
பெற்றது என்கிறார். நம்ம
ஷாஜஹான் ராஜ்புட் அரசர் ஜெய்
சிங் கிட்டேர்ந்து இந்த பெரிய
பில்டிங்கை ஆட்டைய
போட்டதா சொல்றார்.
அது மட்டுமின்றி ஷாஜஹான் தன்
சொந்த குறிப்புகளில்
(பாத்ஷாநாமா) "ஆக்ராவில் மிகவும்
அழகான
ஒரு மாளிகை தனை ஆட்டையைப் போட்ட விவரத்தைக்
குறித்து வைத்துள்ளார்". எனினும் அது தான்
தாஜ் மஹால் என அவர் எழுதவில்லை.
முன்னால் ஜெய்பூர்
மஹா ராஜாவின் குறிப்புகளில்
ஷாஜஹான் ராஜ்புட் மன்னன் ஜெய்
சிங்கிற்கு இது குறித்து அனுப்பிய
இரண்டு ஆணைகள் இன்னும் பத்திரமாய்
உள்ளன என்றும் கூறியுள்ளார்.
முகலாயர்கள் ஆண்ட காலத்தில்
கோயில்களைலும் பெரிய மாளிகைகளைலும்
இறந்த முகலாய மன்னர்களையும்
ராணிகளையும்
புதைப்பதை வழக்கமாய்
கொண்டிருந்தனர்
என்பது எல்லோரும் அறிந்ததே. உதாரணம்.
ஹுமாயுன், அக்பர், எத்மத் உத் தவுலா,
சப்தர்ஜங் இவர்கள் அனைவரும் புதைக்கப்
பட்டுள்ள இடங்கள் பெரிய
மாளிகைகளே என்பது குறிப்பிடத் தக்கது.
பேராசிரியர் ஓக் தன் விசாரணை தனை "தாஜ்
மஹால்" எனும்
பெயரிலிருந்து துவக்கினார்.
இது பற்றி அவர் "மஹால்" எனும்
வார்த்தை அப்கானிஸ்தான் முதல்
அல்ஜீரியா வரை எந்த
ஒரு நாட்டிலும் வழக்கத்தில்
இல்லை என்று குறிப்பிடுகிறார்.
வழக்கத்துக்கு மாறான இந்த "மஹால்"
எனும் சொல் நிச்சயம் மும்தாஜ்
மஹால் எனும்
பெயரிலிருந்து வரவில்லை என்று உறுதியாய்க்
கூறுகிறார். முதலாவதாய் மும்தாஜின் முழுப்
பெயர் மும்தாஜ் உல்
ஜமானி என்பதாகும். இரண்டாவதாய்,
"மும்தாஜ் என்ற பெயரின் முதல்
மூன்று எழுத்துக்களை நீக்கி விட்டு "தாஜ்" என்ற
பெயரைப்
பெற்றிருப்பது சற்றே விசித்திரமானது என்றும்
அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும்
கூறுகிறார். மேலும் ஷாஜஹான் மும்தாஜின்
காதல் கதை தாஜ் மஹால்
விவகாரத்தை மறைக்க உருவாக்கப் பெற்ற
ஒரு அம்புலிமாமா கதை என்கிறார். பல
ஆண்டுகளுக்கு முன்னர் நியுயார்க்கை சேர்ந்த
பேராசிரியர் மார்வின் மில்லர் தாஜ்
மஹாலின் சில மாதிரிகளை எடுத்து கார்பன்
டேட்டிங் முறைப் படி தாஜ் மஹாலின்
ஆயுளை கணித்தார். அவர் கருத்துப் படி தாஜ்
மஹாலின் வயது 300 ஆண்டுகளுக்கு மேல்
பழமையானது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆல்பர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638ஆம்
ஆண்டு (மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்குப்
பிறகு), ஆக்ரா வந்த்துள்ளார். அவருடைய
குறிப்புகளில் தாஜ் மஹால் கட்டப்
படுவதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை. மேலும்
பீட்டர் மண்டி என்ற ஒரு ஆங்கிலேயர் மும்தாஜ்
இறந்து ஒரு ஆண்டுக்குள் ஆக்ரா வந்த
போது தன் குறிப்புகளில் இன்றைய தாஜ்
மஹாலின் கலை நயம்
பற்றி மிகவும்
புகழ்ந்து எழுதியுள்ளார். வரலாறின்
படி தாஜ் மஹால் மும்தாஜ் இறந்து 20
ஆண்டுகளுக்குப்
பிறகு கட்டி முடிக்கப்
பட்டது என்பது நினைவிருக்கட்டும். மேலும்
பேராசிரியர் ஓக் அவர்கள் ஏகப்பட்ட கட்டிட
நுணுக்கங்களை மையமாகக்
கொண்டு அது ஒரு இந்துக் கோயில்
என்று அடித்துக் கூறுகிறார். இன்றும் தாஜ்
மஹாலின் பெரும்
பகுதி பொது மக்களின்
பார்வைக்கு திறந்து விடப்படுவதில்லை. அதன்
காரணம் என்னவென்று கேட்ட எவருக்கும்
கிடைக்கும் பதில் - "பாதுகாப்பு" எனும்
ஒற்றை வார்த்தை தான்.
அது மட்டுமின்றி தாஜ் மஹாலினுள்
தலையில்லாது ஒரு சிவன் சிலையும் இந்துக்கள்
பூஜைக்குப் பயன் படுத்தும் பல
பொருட்களும் உள்ளன என்றும் அவர்
கூறுகிறார்.
அரசியல் காரணங்களார் திரு ஓக்
அவர்களின் புத்தகம் இந்தியாவில்
இந்திரா காந்தியால்
தடை செய்யப்பட்டது. அவர் கூறுவதை உறுதிப்
படுத்திக்கொள்ள ஐக்கிய நாடுகள்
சபையின் தலைமையில்
ஒரு தொல் பொருள் ஆய்வுக்
குழு ஒன்றை உருவாக்கி அவர்கள் தாஜ்
மஹாலை ஆய்வு செய்ய
வகை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.
Friday, December 19, 2014
Filled Under:
hamid, magazinerel2
தாஜ்மஹால் ரகசியம்
Posted by:
Pavithran kalaiselvan
- 8:09 PM
Share
Subscribe to:
Post Comments (Atom)
2015 calender
arivom arivial
articles
downloadable
ennidam kelungal
gk
gurubaai
hamid
kanagaraj
kavidhaipakkam
logo
magazinerel1
magazinerel2
magazinerel3
magazinerel4
magazinerel5
magazinerel6
magazinerel7
magazinerel8
mahendran
manoj
namakkuloruvan
nemihai
novel
pavithran kalaiselvan
pavithrankk
podhunalan karuthi
pongalsplmagzine
prabha
ramani
release urs
santhoshkumaran
sirukadhai pakkam
vaazhkai varaipadam
venkateshmm
விளம்பரம்
்


0 comments:
Post a Comment