Sunday, January 4, 2015

Filled Under: ,

50வருடங்களுக்குபிறகு தண்ணீர் பிரச்சனை

Share

50வருடங்களுக்குபிறகு தண்ணீர் பிரச்சனையால்
என்னவெல்லாம் நடக்கும்னு ஒரு சின்ன கற்பனை

ரேஷன்கடையில் கடத்த முயன்ற1,000 லிட்டர்
தண்ணீர் பாட்டில்களை பொதுமக்கள்மடக்கி பிடித்தனர்.
தண்ணீர் குவிப்பு வழக்கில்(சொத்துகுவிப்பு) மாஜி MLA கைது.

மாதம் 50லிட்டர் தண்ணீர் வழங்கப்படுமென முதலமைச்சர் சட்டசபையில் அறிக்கை வெளியிட்டார்.

ஆற்றில் தண்ணீர் இருப்பதாகநினைத்து குதித்த வாலிபர்
மண்டை சிதறி பலியானார்.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால்தமிழக அரசு சார்பில்
500லிட்டர் குடிநீர் வழங்கப்படுமென முதலமைச்சர் அறிவிப்பு.

அளவுக்கு அதிகமாக குடிநீர்பதுக்கி வைத்திருந்த பிரபல
நடிகர் ZOOM STAR வீட்டில் TWAD அதிரடி சோதனை.

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக18,500 இந்தியர்கள்
வெளிநாடுகளில் குடியேறினர்.

10அடியில் சுவையான குடிநீர்கிடைக்குமென நிலங்களை
விற்ற ரியல் எஸ்டேட் அதிபர் நிலம் வாங்கியவர்களால்
அடித்து கொல்லப்பட்டார்.

1000லிட்டர் தண்ணீர்கேட்டு வரதட்சனை கொடுமை செய்ததால்புதுப்பெண் தற்கொலை.

தண்ணீர் பிரச்சனையால் ஆட்சிப்பொறுப்பேற்ற இரண்டே
மாதத்தில் ஈ.கு.கா கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது, நாளை
முதல்(01/01/2064) ஜனாதிபதி ஆட்சி அமுலுக்கு வருகிறது.

தண்ணீர் கிடைக்காததால் மண்ணெண்னெய் குடித்த
வாலிபருக்கு வாந்தி பேதி மயக்கம்.

தண்ணீர் பிரச்சனைக்காககர்நாடகாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்போன 6அமைச்சர்கள் கர்நாடகாவிலேயே
குடிபெயர்ந்தனர்.

உப்புமா கிண்டும்போது தண்ணீர் குறைவானதால் உப்புமா
கெட்டியாகி இட்லியானது, விவாகரத்து கேட்டு மனைவி
மீது கணவன்வழக்கு.

Aqua badu 1லிட்டர் கேன் வாங்கினால் 2 லிட்டர்
கொக்கமக்காகோலா (கொக்கோ கோலா)இலவசமென
ரீல்ரிலயன்சு அறிவிப்பு.

பந்தியில் சாப்பிட்டு கொண்டிருந்த பெரியவருக்கு விக்கல்
ஏற்பட்டது, அருகிலிருந்தவர் தண்ணீர் தராததால் பெரியவர் விக்கி விக்கியே இறந்தார்.

திருமண பந்தியில் மணமகளின் தாய்மாமனுக்கு தண்ணீர்
தராததால் இருவீட்டாரின்பேச்சுவார்த்தை அடிதடியில்
முடிந்தது.

தண்ணீர் பிரச்சனை சம்மந்தமாக காரசாரமாக பேசிய
எதிர்கட்சி MLAவை அவையை விட்டு வெளியேறுமாறு
சபாநாயகர் உத்தரவிட்டார்.

குடிக்க தண்ணீர் தராததால் 3வது அணி MLAக்கள்
சட்டசபையை புறக்கனித்தனர்.

8மாதங்களுக்கு பிறகு பெரியமழை பெய்ததால் தமிழக மக்கள் ஓராண்டுக்கு பிறகு மகிழ்ச்சியுடன் குடும்பம் குடும்பமாக மொட்டை மாடியில்நின்று சோப்பு பொட்டு மாங்கு மாங்கென்று அழுக்கு தேய்த்து குளித்தனர்.

NOTE:
இப்பயெல்லாம் நடக்கக்கூடாதுன்னா...!!
மரம் வளர்ப்போம். இயற்கை வளம் காப்போம்
தண்ணீர் பிரச்சனையை போக்குவோம்......!!! இப்படிக்கு சிந்தனை சிற்பி

0 comments:

Post a Comment