Thursday, January 15, 2015

Filled Under: ,

பொங்கல் விழா

Share
பொங்கல் விழா எப்போதும்
நான்கு நாட்கள்
கொண்டாடப்படுகிறது.
அவை முறையே போகி,
பொங்கல், மாட்டுப் பொங்கல்,
காணும் பொங்கல்.
இந்த நான்கையும் பற்றி பல
ஆண்டுகளாகவே பலர் தவறான
விளக்கங்கள் கூறி வருகிறார்கள்.
`போகி நாள்’ என்பதைப்
`போக்கி நாள்’ என்கிறார்கள்.
அதாவது வீட்டிலுள்ள கழிவுப்
பொருட்களை, பழையனவற்றைப்
`போக்கும் நாள்’ என்கிறார்கள்.
எப்போதுமே சுத்தப்படுத்தும்
நாளை ஒரு திருநாளாக எந்தக்
காலத்திலும்
கொண்டாடியதில்லை.
`போகி’ என்ற
வார்த்தை தெளிவாகவே இருக்கிறது.
விளைச்சல் என்பது, `போகம்’
என்படும்.
போகத்துக்குரியவன்
நிலச்சுவான்தார். அதனால் தான்
அந்த விழா, நிலம் உள்ளவர்களின்
வீட்டில் மட்டும் தடபுடலாக
இருக்கும்.
போகத்துக்குரியவனின்
விழா `போகி விழா’
வயலில் இறங்கி உழைக்கும்
விவசாயிக்கு உள்ள விழா,
`பொங்கல் விழா’. அவனுக்குப்
பயன்படும் மாடுகளுக்கான
விழா, `மாட்டுப் பொங்கல்’
விழா.
அந்த உணவைப்
பகிர்ந்து கொள்ளும் நிலமும்
இல்லாத, விவசாயமும் செய்யாத
பொதுமக்களின் விழா, `காணும்
பொங்கல்’ விழா.
இதுதானே வரிசை.
நிலத்துக்குரியவன்,
விவசாயி,
காளை மாடு,
பொதுமக்கள்.
நான்கு நாள் விழாவிலும்
பொங்கல் என்பது
திறந்த
இடத்திலேயே வைக்கப்படும்;
அதாவது சூரிய வெளிச்சம்
படுகிற இடத்தில்.
அது வானத்துக்குச் செலுத்தும்
நன்றி.
ஆரோக்கியத்திற்காக எந்தெந்தப்
பொருட்களை உபயோகப்படுத்துகிறோமோ,
அவை எல்லாம்
பொங்கலிலே பயன்படுத்தப்படும்.
திருவிழாக்களின்
வார்த்தைகளையும்,
நோக்கங்களையும்,
அடிப்படைகளையும்,
புரிந்து கொள்ளாமல் பலர்
விளக்கம் கூறி விடுகிறார்கள். இனியாவது பண்டிகைகளின் நோக்கம் அறிந்து கொண்டாடுவோம்..
அனைவருக்கும் இனிய பொங்கள் திருநாள் நல்வாழ்த்துகள் 🌞

0 comments:

Post a Comment