காலம்காலமாக தமிழர்களின்
பாரம்பரியமான ஜல்லிக்கட்டு என்ற
வீரவிளையாட்டு மதுரை அருகில்
அலங்காநல்லூரில் சிறப்பாக
நடைபெறுவது நம்மில் பலர்
அறிந்ததே. இந்த வருடம்
ஜல்லிக்கட்டு நடைபெறுமா ???
வாடி வாசலில் கருப்புக் கொடி ....
பார்க்கவே துயரமாக இருக்கிறது ....
மாடுகளுக்காகவே ஒரு திருநாள்
கொண்டாடும் நாம்
மாடுகளை சித்ரவதை செய்கிறோமா?
சில
மாதங்களுக்கு முன்பு போடி மெட்டு பகுதியில்
இருந்து கேரளாவுக்கு மாடுகள்
ஏற்றிச் சென்ற லாரியில் பயணிக்க
நேர்ந்தது ... மாடுகளை ஏற்றி வந்த
வியாபாரியிடம் ஒரு பை ... அதில்
நிறைய பச்சை மிளகாய் ...
பச்சை மிளகாய் எதுக்குங்க
என்று கேட்டதற்கு .... லாரியின்
ஓட்டத்தில் நெருக்கமாக பிணையப்பட்ட
மாடுகளில்
ஒன்று சரிந்து அமர்ந்தாலும்
அடுத்தடுத்த மாடுகள்
சரிந்து அதன்மீது விழுந்து இறக்க
நேரிடும் மாடு செத்தால்
நல்லவிலைக்கு வியாபாரமாகாது ...
அதனால் மாடு விழுந்துவிட்டால்
அதனை எழுப்புவதற்கு இந்த
பச்சைமிளகாயை கிள்ளி அதன்
கண்ணில் தேய்ப்போம் ... எரிச்சலில்
மாடு துள்ளி எழுந்துவிடும்
என்றார் ....... இதைக்கேட்ட என்
கண்களில் நீர் ... மிளகாய் காரத்தால்
இல்லை ... மிருகவதையின்
காரணத்தால் ....
தமிழ்நாட்டிலிருந்து ஒரு நாளைக்கு கேரளவுக்கு அறுப்பு மாடுகள்
ஏற்றிச் செல்லும் லாரிகளின்
எண்ணிக்கை 100 க்கும் மேல ... ஒரு 6
டயர் லாரிக்கு 22 மாடுகள் ....
ஒரு பத்து டயர் லாரிக்கு 36
மாடுகள் ....அப்போ ஒரு நாளைக்கு ஏற்றுமதியாகும்
மாடுகளின் எண்ணிக்கை ?
தமிழகத்தின்
கோடியிலிருந்து கேரளாவுக்கு செல்லும்
வரை அந்த
மாடுகளுக்கு ஒரு சொட்டு தண்ணீர்
கூட காட்டமாட்டார்கள் .... ஆனால்
கேரளா பார்டர்
போடி மெட்டு பகுதிக்கு சென்றதும்
மாடுகளுக்கு தவிடும்
புண்ணாக்கும் சரமாறியாக
கிடைக்கும் ...
ஏன்னா மாடு தெளிவா இருந்தாத்தான்
கேரளாக் காரன்
காசு கனிசமா தருவான் ....
இதெல்லாம் மிருக
வதை கிடையாதாம் ....
காளைகளுக்கு மரியாதை செய்து அங்கீகாரம்
கொடுத்து களத்தில் விளையாட
விட்டு வேடிக்கைப் பார்ப்பது மிருக
வதையா ? தமிழ் மெல்ல மெல்ல
அழிந்து வருவது போல தமிழரின்
பாரம்பரியம் மிக்க
விளையாட்டுகளும்
அழிந்து விடக்கூடாது ....
உரிமைக்கு குரல் கொடுப்போம்
தோழர்களே ...
மாடுபிடிக்க போய்
மூக்கு உடைபட்டாலும் அதை வீரமாக
எண்ணியவன் நாங்க ....
விளையாட்டாக ஆடிய இந்த வீர
விளையாட்டுக்கு இத்தனை போராட்டம்னு நினைக்கும்
போது வேதனையாக உள்ளது.
Saturday, January 17, 2015
Filled Under:
kanagaraj, magazinerel5
வீரம்
Posted by:
Pavithran kalaiselvan
- 10:54 PM
Share
Subscribe to:
Post Comments (Atom)
2015 calender
arivom arivial
articles
downloadable
ennidam kelungal
gk
gurubaai
hamid
kanagaraj
kavidhaipakkam
logo
magazinerel1
magazinerel2
magazinerel3
magazinerel4
magazinerel5
magazinerel6
magazinerel7
magazinerel8
mahendran
manoj
namakkuloruvan
nemihai
novel
pavithran kalaiselvan
pavithrankk
podhunalan karuthi
pongalsplmagzine
prabha
ramani
release urs
santhoshkumaran
sirukadhai pakkam
vaazhkai varaipadam
venkateshmm
விளம்பரம்
்


0 comments:
Post a Comment