Thursday, January 29, 2015

Filled Under: , ,

மிசோஃபோனியா

Share

நாம் அனைவருமே இதைச் சந்தித்திருப்போம்!
சிலர் சாப்பிடும் பொழுது, பற்களைக்
கொண்டு ஓசையுடன் மெல்லுவார்கள்.
வேறு சிலரோ, மூச்சு விடும்
பொழுது அதிகமான ஒலி எழுப்புவார்கள்.
அப்பொழுதெல்லாம், இவர்களுக்கு என்ன
பிரச்சனை என்று உள்ளூர எரிச்சல்
அடைந்திருப்பீர்கள் அல்லவா? இந்த
எரிச்சலுக்குப் பெயர் உண்டு,
இதை மிசோஃபோனியா என்று அழைப்பார்கள்!
மிசோஃபோனியா என்பது "ஒலி வெறுப்பு"
என்ற பொருள் தரும். குறிப்பிட்ட ஒலிகள்
மூலம் எதிர்மறை உணர்வைத் தூண்டுவதே இந்த
மிசோஃபோனியா. இது ஒரு வகை நரம்பியல்
கோளாறு ஆகும். மிசோஃபோனியா நோய்
உள்ளவர்கள் வாழ்வில் அடிக்கடிக் கேட்கின்ற
ஒலிகளைக் கேட்டால் கூட பெருங்கோபம்
கொள்கின்றனர். சிரிப்பொலி, பல்
துலக்குவதால் ஏற்படும் ஒலி, குறட்டை ஆகிய
ஒலிகளும் இதில் அடங்கும்.
மிசோஃபோனியா எத்தனை சதவீத
மக்களுக்கு இருக்கிறது என்று சரியான
கணக்கீடு இல்லை. ஆனால், சில ஆராய்ச்சிகள்
பத்து சதவீத
மக்களுக்கு மிசோஃபோனியா இருக்கிறது என்று தெரிவிக்கிறது.
இன்னும் சில ஆராய்ச்சிகள் அறுபது சதவீத
மக்களுக்கு இருப்பதாகத் தெரிவிக்கிறது.

0 comments:

Post a Comment